வாழ்க்கை பாதையில்…
உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர். தீயும் தண்ணீரும் உண்டு, செழிப்பான மேடும் உண்டு (சங் 66:12). நாம் நினைப்பது போல எல்லாம் நடந்துவிட்டால், அது அர்த்தமும் அருமையுமான வாழ்க்கை என்று எண்ணுகிறோம். அப்படியல்ல, எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை எனபது வேதம் கூறும் உண்மை (பிலி 4:11-13). வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை மையமாக வைத்து வாழுவோமேயானால், வாழ்க்கை பாதை என்றும் பரவசமே!
வாழ்க்கை பாதையில் உயர்வானாலும் தாழ்வானாலும், நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை தாவீது பாடலாய் பாடியுள்ளார் (சங்கீதம் 31). அதை நமது வாழ்க்கை பாதையின் பாடமாய் எடுத்துக்கொள்வோம்.
வாழ்க்கை பாதையில்…
1. கர்த்தரையே நம்பு. சங் 31:1
2. கர்த்தரிடத்தில் உன்னை ஒப்புவி. சங் 31:5 (5-8).
3. கர்த்தரிடமே உன்னை வெளிப்படுத்து. சங் 31:9-14.
4. கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணு. சங் 31:15-18.
5. கர்த்தரின் நன்மைகளை நினைவுகூறு. சங் 31:19,20.
6. கர்த்தரை துதி. சங் 31:21,22.
7. கர்த்தரின் செயல்களை சாட்சியாக அறிவி. சங் 31:23,24.
– Vivekk7