மருந்தும், தடுப்பு மருந்தும்
இன்று முழு உலகும், அந்தஸ்தையும் ஆஸ்தியையும் அடுத்த இடத்தில் அகற்றிவிட்டு, ஆரோக்கியம் ஒன்றே அவசியம் என்ற புரிதலோடு, COVID-19-னிலிருந்து தப்பி வாழ விரும்புகிறது.
வையக மாந்தர்க்கு, ஆரோக்கிய வாழ்வுக்கான மருந்தையும், தடுப்பு மருந்தையும், அதி தீவிரமாக கண்டுபிடிக்கும் முயற்சியில், மருந்தியல் வல்லுநர்கள் இறங்கியிருக்கும் இந்நாட்களில்…
தேவனுடைய வார்த்தையோ, மனிதன் சரீரத்தில்மட்டுமல்ல, ஆத்துமாவிலும், ஆரோக்கியமுடன் வாழ வழி காட்டுகிறது.
இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து
( தீமோத்தேயு & தீத்துவின் நிருபங்களிலிருந்து )
1. தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:14
2. தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:9
3. தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது. 1 தீமோ 6:3
4. தேவனுடைய உபதேசத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வது ஆரோக்கியமானது. 1தீமோ 1:12
5. தேவ பக்தியோடு வாழ்வது முதிர் வயதிலும் ஆரோக்கியமானது. தீத்து 2:2
6. தேவ தயவில் வாழ்வது குறைவற்ற ஆரோக்கியமானது. தீத்து 2:8
இந்த ஆரோக்கிய மருந்தை அசட்டை செய்வது, ஆத்துமாவிற்கு அபாயகரமானது. 1 தீமோ 6:3-4; 2 தீமோ 4:3-4
நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏரே 30:17
K. ராம்குமார் ஓசூர்