ஆனந்தமான அண்ணகன்
எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுடைய மந்திரியும், அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனாகிய எத்தியோப்பியன் (அப் 8:27) ஒரு அண்ணகன் என்று வேதபண்டிதர்களால் அழைக்கப்படுகிறான். அவன் பணிந்துகொள்ள எருசலேமுக்கு வந்து திரும்புகிற சம்பவம் அப்போஸ்தலருடைய நடபடிகள் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவன் வரும்போது எப்படிப்பட்ட மனநிலையோடு வந்திருந்தான் என்று தெரியாது. ஆனால், திரும்பி செல்லும்போதோ “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (அப் 8:39) என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம்:
1. ஆலய வருகை. 8:27
2. ஆகம வாசிப்பு. 8:28
3. ஆராய்கின்ற இருதயம். 8:31,34
4. ஆண்டவரின் மேல் விசுவாசம். 8:37
5. ஆர்வமான செயல்பாடு. 8:36
6. ஆசையான கீழ்ப்படிதல். 8:38
7. ஆனந்தமான வாழ்வு. 8:39
நீங்களும் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், வேதம் வெளிப்படுத்துகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முமு இருதயத்தோடு விசுவாசித்து, அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிவீர்களானால்…
ஆனந்தமான வாழ்வு உங்களுக்கும் இலவசம்!
Vivekk7
மிக அருமை! ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!