TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7லூக்காவேதவசனம்

வனாந்திரத்தை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

அன்றைய  ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் தலைவர்களும், யூத மதத் தலைவர்களும் அக்கால மக்களின் வாழ்வை வனாந்திரமாக்கியிருந்தனர்.  இந்நிலையில்தான், வனாந்திரத்தில் தேவனுடைய வார்த்தை யோவானுக்கு உண்டாயிற்று (லூக் 3:2), இவ்வாறு வனாந்திரத்தில் உண்டான வல்லமையுள்ள தேவ வார்த்தையை, யோவான் ஸ்நானகனிடத்தில் கேட்டறிந்த  திரள் கூட்ட ஜனங்கள்,  வறட்சியாக்கப்பட்ட வனாந்திர வாழ்க்கையை வளமாக்கினர்.

இதோ, வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

“லூக்கா எழுதின சுவிசேஷம்  மூன்றாம் அதிகாரம் “

1. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினர். – 3:3 

( தேவன் தங்கள் அருகில் வர )

2. அவருக்கு பாதைகளை செவ்வை பண்ணினர். – 3:3 

( தேவனிடம் நெருங்கி செல்ல )

3. மனந்திரும்புதலுக்கேற்றக் கனிகளைக்  கொடுத்தனர். – 3:8 

( தமது தோட்டத்தில், பராமரித்து பாதுகாத்த தேவனுக்கு )

4. குலப்பெருமையை விட்டு விட்டனர். – 3:8 

( தேவனுக்கு பிள்ளைகளானதால் )

5. ஆடை ஆகாரத்தை, பகிர்ந்துகொண்டனர். – 3:12 

( ஆகாய பறவைகளை அன்றாடம் போஷிக்கும் ஆண்டவரை அறிந்துகொண்டதால் )

6. அநியாயமான  வருமானத்தை மறுத்துவிட்டனர். – 3:13 

( தேவன் நியாயமாய் தீர்ப்பு செய்பவராகையால் )

7. குற்றஞ்சாட்டுவதை நிறுத்தினர். – 3:14 

( தேவனுக்கு முன் தாங்களும் குற்றவாளிகள் எனும் உண்மையை அறிந்ததினால்  )

8. போதும் என்ற மன திருப்தி அடைந்தனர். – 3:14 

( தேவனே  எல்லாவற்றிற்கும் போதுமானவரானதால் )

9. தவறான யோசனையை தவிர்த்தனர். – 3:15-16 

( வரப்போகும் வல்ல தேவனின் வருகையின் உண்மையை  அறிந்துகொண்டதால் )

தேவ வார்த்தையை வாஞ்சையுடன் கேட்போரின் வனாந்திர வாழ்க்கையை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை இன்றும் மாறாமலிருக்கிறது. 

“கர்த்தர் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.” ஏசா 51:3

K. ராம்குமார் ஓசூர்

One thought on “வனாந்திரத்தை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

Leave a Reply to M.gnanasekar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)