TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
ஆவிக்குரிய வளர்ச்சிதேவனுடைய ஈவு

காத்துக்கொள்

“உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.” 2 தீமோ 1:14

தேவன் நம்மை அனுதினமும் அற்புதமாக பாதுகாப்பவராயினும், நம்மிடம் விலைமதிக்க இயலாத ஆவிக்குரிய பொக்கிஷங்களை ஒப்புவித்துள்ளார். அதை பவுல், தீமோத்தேயு காத்துக்கொள்ளும்படி ஆலோசனை சொல்லுகிறார். ஆதி தகப்பன் ஆதாம், தேவன் கொடுத்த நற்பொருளை காத்துக்கொள்ள தவறினான் (ஆதி 2:15). விளைவு ஆதாமுக்கும்  அவன் வழித்தோன்றலாகிய மனிதகுலம் அனைத்திற்கும் மாபெரும் இழப்பு. 

ஆதாமினால் இழந்துபோன அனைத்து நற்பொருளையும் கிறிஸ்து நமக்கு மீண்டும் கொடுத்துள்ளார். அதை கண்மணி போல் காத்துக்கொள்வது நம் கடமை.

“நாம் காத்துக்கொள்ள வேண்டிய நற்பொருள்”

1. தேவ ஞானம் -நீதி 3:22

2. தேவ வசனம். -நீதி 4:21

3. தேவ கட்டளை. -நீதி 7:2

4. தேவன் கொடுத்த சரீரம். -1 தெச 5:23

5. தேவன் கொடுத்த ஆத்துமா. -உபா 4:10

6. நமக்குள் இருக்கும் தேவ ஆவி. -எபே 4:3

7. தேவன் தந்த விசுவாசம். -2 தீமோ 4:7

8. தேவ ஈவாகிய இரட்சிப்பு. -வெளி 16:15

9. தேவன் கொடுத்த மேன்மை. -யூதா  6

10. தேவன் தந்தருளிய குடும்பம். -1 பேது 3:20

இவையனைத்தும் ஆண்டவர் கிருபையாய் தந்த நற்பொருளாகும் அதை காத்துக்கொள்வது நம் கடமையாகும். 

K ராம்குமார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)