இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள்…
இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள்… 2 பேதுரு 3:14
அப்போஸ்தலனாகிய பேதுரு தனது இரண்டாம் நிருபத்தில் கர்த்தருடைய இரண்டாம் வருகையை குறித்து முக்கியத்துவப்படுத்தி எழுதியிருக்கிறார். கர்த்தருடைய வருகையின் நாள் இரவில் திருடன் வருகிற விதமாய் வரும் (2 பேதுரு 3:10). ஆகையால் பிரியமானவர்களே (2 பேதுரு 3: 14, 1, 8, 17) அவருடைய வருகையை ஆவலாய் எதிர்நோக்கி வாழ வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்.
கர்த்தருடைய வருகையை “ஆவலோடே” (3:12) எதிர்பார்க்கிக்கிற நாம், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறி பேதுரு தனது நிருபத்தை முடிக்கின்றார்.
கர்த்தருடைய வருகை மற்றும் தேவனுடைய நாள் (நித்தியம்) வரக் காத்திருக்கிற நீங்கள்…
1. கரையற்றவர்களும் பிழை இல்லாதவர்களுமாய் வாழுங்கள். (3:14)
2. சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்பட ஜாக்கிரதையாக இருங்கள். (3:14)
3. மனந்திரும்ப கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்துங்கள். (3:15)
4. வேத வசனங்களை அறிந்து கொள்ளுங்கள். (3:16)
5. வஞ்சகத்தினால் இழுப்புண்டு போகாதிருங்கள். (3:17)
6. உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். (3:17)
7. இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். (3:18)
– கே. விவேகானந்த்