உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கு
யோசேப்பு உணவை பங்கிட்டான், எகிப்தியர் விளைச்சலில் ஒரு பங்கை அரசுக்கு அளித்தனர், ஆசாரியனுக்கு பலியின் இறைச்சியை பங்கிட்டனர், யோசுவா நிலங்களை பங்கிட்டான், கொள்ளையடித்த பொருளை, கொள்ளையர்கள் பங்கிட்டுக்கொண்டனர்.
இவையெல்லாம் உலகத்தின் பங்குகள்
“நமக்கோ தேவன் உன்னதத்தின் பங்குகளை ஈந்தளிக்கின்றார்”
உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கு (யோபு 31:2)
1. நேர்த்தியான இடத்திலோர் பங்கு. சங் 16:6
2. ஜீவனுள்ளோருடைய தேசத்திலோர் பங்கு. சங் 145:5
3. ஆலயத்தின் ஆசீர்வாதத்திலோர் பங்கு. 1கொரி 9:13
4. அன்புத் தகப்பனின் ஆஸ்தியிலோர் பங்கு. லூக் 15:12
5. ஒளியின் தேசத்திலோர் பங்கு. கொலோ 1:13
6. தேவனது திவ்விய சுபாவத்தில் பங்கு. 2 பேது 1:4
7. பரம தேசத்திலும், பரிசுத்தமாக்கப்பட்ட பாவிக்கு ஒரு பங்கு. எபி 3:1
இதனாலேயே, மரியாள் பரமதேவனின் பாதத்தில் அமர்ந்து, தன்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கைத் தெரிந்துகொண்டாள் !! லூக் 10:42
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன் திருப்பாதம்
வல்ல பராபரனே சரணம்.
K. ராம்குமார், ஓசூர்
Very useful to share God’s word.
Glory be to god alone.