கர்த்தரை நம்புகிற மனிதனின் நம்பிக்கை
(சங்கீதம் 11)
மனிதர்களும், சூழ்நிலைகளும் “பட்சியைப் போல பறந்து போ” என்று நம்மை துரத்தினாலும், ஆபத்திலும் (1வச), அந்தகாரத்திலும் (2வச), அசைக்கப்படுகின்ற (3வச) அனுபவங்களிலும்
“கர்த்தரை நம்புகிற மனிதனின் நம்பிக்கை.” (சங் 11:1)
1. எனக்கு ஒரு கர்த்தர் இருக்கிறார். (சங் 11:4)
2. தம்மை ஆராதிப்பவர்கள் நடுவில் அவர் இருக்கிறார். (சங் 11:4)
3. பரம அதிகாரமுள்ள சிங்காசனத்தில் அவர் இருக்கிறார். (சங் 11:4)
4. எனக்கு நேரிடுகிறது எல்லாம் பரலோகத்தில் இருந்து அவர் காண்கிறார். (சங் 11:4)
5. அவர் என்னை சோதித்தறிகிறார். (சங் 11:5)
6. அவர் எனக்கு நீதி செய்வார். (சங் 11:6,7அ)
7. அவர் எனக்குரிய வெகுமதியை எனக்கு தருவார். (சங் 11:7ஆ; எண் 6:25,26)
கே. விவேகானந்த்