இரட்சிக்கப்படாத நண்பர்களுக்காக ஜெபிப்பது எப்படி?
“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்… விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” ( ரோமர் 1:16 )
- ஆண்டவர் அவர்களை தம்மிடம் இழுத்துக்கொள்ளும்படி ஜெபியுங்கள்.
“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” (யோவா 6:44)
- அவர்களின் பாவத்தை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உணர்த்தும்படி ஜெபியுங்கள் .
“அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” (யோவா 16:8)
- அவர்களிடம் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்காக ஜெபியுங்கள்.
“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,
திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.” (கொலோ 4:3-4)
- மற்றவர்களும் அவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி ஜெபியுங்கள்.
“அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத் 9:38)
- சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு அவர்களின் மனக்கண்கள் திறக்கப்படும்படி ஜெபியுங்கள்.
“கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரி 4:4)
- சுவிசேஷத்தை கவனிக்கும்படி தங்கள் இருதயத்தை அவர்கள் திறந்து கொடுக்க ஜெபியுங்கள்.
“பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” (அப் 16:14)
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவா 1:12)
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப் 16:14)
– Vivekk7