இன்றைக்கு அல்லது நாளைக்கு

D. L. மூடி பிரசங்கியார் ஒரு பட்டணத்தில் கிறிஸ்துவைப்பற்றின நற்செய்தியில், இன்று இயேசு கிறிஸ்து யார்? என பிரசங்கித்து நிறுத்திவிட்டு, நாளை நீங்கள் வாருங்கள் இவரை என்ன செய்ய வேண்டும் என சொல்லுகிறேன் என கூட்டத்தை முடித்தார், கூட்டம் முடிந்த அன்று அப்பட்டணத்தில், தீ விபத்து ஏற்பட்டு பல ஆயிரம்பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மரித்ததினால், D. L. மூடி இவ்வாறு அழுதார், “இன்றைக்கு செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளிப்போட்டுவிட்டேனே” என்று.

இதோ இன்றைக்கு நாம் செய்ய வேண்டியவை…..

1. இன்றைக்கு இரட்சகரை பார்க்க வேண்டும், நாளை அவர் நியாயாதிபதி. லூக் 19:9

2. இன்றைக்கு நம் வீட்டில் அவர் தங்கவேண்டும், நம்மை உணரச் செய்ய. லூக் 19:5

3. இன்றைக்கு காட்டுப் புல்லை கவனிக்க வேண்டும், கவலையற்றிருக்க. லூக் 12:12:27

4. இன்றைக்கு தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும், தேவ இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க. மத் 21:28

5. இன்றைக்கு தேவ எச்சரிப்பை கவனிக்க வேண்டும், நாளை மறுதலித்து மனங்கசந்து அழுவதை தவிர்த்துவிட. லூக் 22:34

6. இன்றைக்கு அருகிலிருப்போருக்கு ஆண்டவரை அறிவிக்கவேண்டும், வரப்போகும் தண்டனைக்கு தப்புவிக்க. மத் 27:19

7. இன்றைக்கு தேவ இராஜ்ஜியத்தை தேட வேண்டும், பரலோகில் பரிசுத்தரோடிருக்க. லூக் 23:43

நாளைக்கு நடப்பது உங்களுக்கு தெரியாதே !! யாக் 4:14

K. ராம்குமார் ஓசூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: