TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7இயேசு கிறிஸ்துசுவிசேஷம்யோவன்

இவரே தேவனுடைய குமாரன்

“யோவான் சுவிசேஷம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த ஒரு சாட்சி புத்தகம் (யோ21:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உண்மையை சாட்சி கொடுத்து நிலைநிறுத்துவது அவசியமாக இருந்தது (யோ 8:17,18). யோவான் சுவிசேஷத்தில் மட்டுமே “சாட்சி” என்ற வார்த்தை சுமார் 45க்கும் அதிகமான முறை வருகிறது. மட்டுமல்ல, யோவான் சுவிசேஷத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த 7 வித சாட்சிகளை காண முடியும். அவ்விதம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சியாக அறிவிக்கும்படி வந்தவர்தான் யோவன் ஸ்நானகன் (யோ 1:7, 3:26, 5:33). இயேசு கிறிஸ்துவை குறித்து பலவிதங்களிலே அவர் சாட்சி கொடுத்தார் (யோ1:7, 29, 34). அதிலே ஒன்றுதான் “இவரே தேவனுடைய குமாரன்” என்பதாகும் (யோ 1:34).

இவரே தேவனுடைய குமாரன் ஏனென்றால்…

1. முன்னிருந்தவர். 1:15

நித்தியர்

2. மேன்மையுள்ளவர். 1:15

உன்னத்திலிருந்து வருகிறவர் (3:31)

3. பரிபூரணர். 1:16

தேவத்துவத்தின் பூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோ 2:9, 1:9)

4. கிருபையையும் சத்தியத்தையும் அருளினவர். 1:17

நியாயப்பிரமாணம் பாவத்தை சுடிகாட்டும், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் நமது பாவத்தை மன்னித்து, சத்தியத்தின்படி நமக்காக சிலுவையில் மரிக்கும்படி வந்தார் (1:14).

5. தேவனை வெளிப்படுத்தின ஒரேபேறான குமாரன். 1:18

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.

6. நாம்  அறியாதிருக்கிற ஒருவர். 1:26

இன்றைக்கும் உலகம் அவர் யாரென்று அறியாது அவரை புறக்கணிக்கிறது. அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும்படி வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி (1:29, 36).

7. ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர். 1:33

தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை தந்து (யோ7:39), தம்மை விசுவாசியாதவர்களை நித்திய நரக அக்கினியினால் நியாயந்தீர்ப்பார் (யோ 3:36).

“இவரே தேவனுடைய குமாரன்”

– Vivekk7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)