இதோ வெட்டுக்கிளி பேசுகிறேன்…
வெட்டுக்கிளியும் பாரமாகி….. பிரசங்கி 12:5
கொரோனாவின் கோரம் முடியும் முன், வெட்டுக்கிளியின் பாரம் தொடங்கியுள்ளது. தற்போது இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டுவரும் வெட்டுக்கிளிகள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து என்ன பேசுகிறது!
இதோ வெட்டுக்கிளி பேசுகிறேன்…
1. உன் முதிர்வயதின் காலத்திற்கு முன் தேவனை நினை. பிர 12:5
2. தேவன் சிருஷ்டித்த உருண்டையான பூமியிலே, நீங்கள் எங்களைப்போலத்தான் அற்பமானவர்களாக இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். ஏசா 40:22; எண்13:33
3. தேவனின் ஆணைக்கு அடிபணிந்து, அரசனையும் அரசையும், அதிர வைத்தோம். யாத் 10: 1-19; சங் 105:34
4. தேவன் அருளிய மகா ஞானத்தினால், நாங்கள் அரசன் இன்றியும், அணிவகுத்து செல்கிறோம். நீதி 30:27
5. தேவனாலே, தேவ மக்களின் தவறுகளைத் திருத்த பயன்படுத்தப்பட்டோம். யோவேல் 1:3-4
6. தேவன் எங்களை அனுப்பி, உங்களை நீங்கள் தாழ்த்தவும், ஜெபிக்கவும் வைக்கிறார். 2 நாளா 6:28-30; 7:13,14
7. தேவனுடைய நியாயத்தீர்ப்பை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். சங் 78:46
8. தேவன், தீங்குக்கு மனஸ்தாபப்படுபவர் என்பதும் எங்களுக்கும் தெரியும். ஆமோஸ் 7:1-3
9. தேவன் தமது மக்களுக்கு, அவர்கள் இழந்து போனதை எல்லாம் திரும்ப கொடுத்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். யோவேல் 2:25-26
10. அழிக்கிறவர்களாக மட்டுமல்ல, தேவனுடைய பரிசுத்தவானின் ஆகாரமாகவும் இருந்தோம். மத் 3:4; லேவி 11:22
தேவ பிள்ளைகளே! இவைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தவே வந்துள்ளேன்! மறந்திடாதீங்க!!
சகோ K. ராம்குமார் Evg
9842164877 ஓசூர். ✍️