நீர் எனக்குத் தந்தவர்கள்

கிறிஸ்துவானவர், பிதாவினிடம் நீர் எனக்குத் தந்தவர்கள் என்று, சீஷர்களை பிதாவானவர் தனக்கு தந்த மிகப்பெரிய பரிசாக கருதி, கருத்தோடு ஜெபிக்கிறார், ஒவ்வொரு ஜெப சொற்களுக்கு முன்பும், நீர் எனக்குத் தந்தவர்கள் என்று அழுத்தமாக சொல்கிறார்.

யோவான் சுவிசேஷம் 17 ம் அதிகாரம்

இதோ நீர் எனக்குத் தந்தவர்கள்

1. நீர் எனக்குத் தந்தவர்கள் நித்திய ஜீவனை அடைய வேண்டும். 17:2

2. நீர் எனக்குத் தந்தவர்கள் உம் வசனத்தை கைக்கொள்ளவேண்டும்.17:6

3. நீர் எனக்குத் தந்தவர்கள் உம்மையும், என்னையும் அறிந்திருக்கிறார்கள். 17:7-8

4. நீர் எனக்குத் தந்தவர்களில் நான், மகிமைப்பட்டிருக்கிறேன். 17:9-10

5. நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல, ஒன்றாயிருக்கவேண்டும். 17:11

6. நீர் எனக்குத் தந்தவர்களை கெட்டுப்போய்விடாதபடி, காத்துக்கொள்ளும். 17:12

7. நீர் எனக்குத் தந்தவர்கள் என் மகிமையைக் கண்டு, என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன். 17:24

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அந்த ஜெபம், பிதாவினிடம் கிறிஸ்து நீர் எனக்குத் தந்தவர்கள் என நம்மையும் முன் வைக்கிறார்.

நாமும், பிதாவினால் குமாரனுக்கு தந்தருளப்பட்ட விசேஷித்த பரிசுகள்தானே !!!!

உங்கள் சகோதரன்
K ராம்குமார். ஓசூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: