தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17

சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனை அது. ஒரு குற்றமும் செய்யாத கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, அதை தனக்குரிய தண்டனையாய் ஏற்றுக்கொண்டு, தம்முடைய சிலுவையை சுமந்தார். உண்மையாக அது நம்முடைய சிலுவை.

சிலுவையின் உருவத்தில் அவர் சுமந்தது என்ன?

  1. நம்முடைய பாவத்தை சுமந்தார். (1 பேதுரு 2:24)

“அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்.”

  1. நம்முடைய பாடுகளை சுமந்தார். (ஏசாயா 53:4)

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.”

  1. நமக்குரிய பரிகாரத்தை சுமந்தார். (எபேசியர் 3:14-15)

“ அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து…  பகையைச் சிலுவையினால் கொன்று… தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.”

நமக்காய் சிலுவை சுமந்த இரட்சகரை நினைவுகூர்ந்து பிதாவை ஆராதிப்போம்.

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: