TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7ஆராதனை தியானம்சிலுவை

தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் |ஆராதனை தியானம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, கட்டாயத்தினிமித்தம் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. அவர் தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

ஏன்? எதற்காக? 

  1. நம்மில் அன்புகூர்ந்து நமக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 2:20
  1. நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4
  1. நம்மை விடுவிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4
  1. நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டு சுத்திகரிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். தீத்து 2:14
  1. நம்மை தமக்குரிய சொந்த ஜனங்களாக மாற்றும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். தீத்து 2:14
  1. நம்மை பரிசுத்தமும் மகிமையுமுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 5:27

எப்படி ஒப்புக்கொடுத்தார்?

  1. பலியாக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். எபிரெயர் 9:14, எபேசியர் 5:2 

நமக்காக தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த தேவகுமாரனாகிய கிறிஸ்துவை நினைவுகூர்ந்து ஆராதிப்போம்.

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)