தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் |ஆராதனை தியானம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, கட்டாயத்தினிமித்தம் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. அவர் தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
ஏன்? எதற்காக?
- நம்மில் அன்புகூர்ந்து நமக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 2:20
- நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4
- நம்மை விடுவிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4
- நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டு சுத்திகரிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். தீத்து 2:14
- நம்மை தமக்குரிய சொந்த ஜனங்களாக மாற்றும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். தீத்து 2:14
- நம்மை பரிசுத்தமும் மகிமையுமுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 5:27
எப்படி ஒப்புக்கொடுத்தார்?
- பலியாக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். எபிரெயர் 9:14, எபேசியர் 5:2
நமக்காக தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த தேவகுமாரனாகிய கிறிஸ்துவை நினைவுகூர்ந்து ஆராதிப்போம்.
கே. விவேகானந்த்