மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
“மகிமையின் மேல் மகிமை” என்பது எவ்வளவு அழகான வார்த்தை. தேவன் நம்மை குறித்து விரும்புகிற மிக முக்கியமான நோக்கம், மகிமையின் மேல் மகிமையடைய வேண்டும் என்பது மட்டுமல்ல. அத்தோடு நாம் மறுரூபமடைய வேண்டும் என்பதுமாகும் (2 கொரி 3:18).
அதன் முன்மாதிரியை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மறுரூப மலையில் நிகழ்த்திக் காட்டினார் (மத் 17:1-9).
மகிமையின் மேல் மகிமை அடையும்போது, நம்மில் உண்டாகும் மறுரூபம்
- முகத்திலே மறுரூபம். மத் 17:2
“அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது,”
- வஸ்திரத்தில் மறுரூபம். மத் 17:2
“அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.”
- கண்களில் மறுரூபம். மத் 17:3
“மோசேயும், எலியாவும்… அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”
- செவியில் மறுரூபம். மத் 17:3
“மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”
- விருப்பத்தில் மறுரூபம். மத் 17:4
“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது”
- அர்ப்பணிப்பில் மறுரூபம். மத் 17:6
“சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து,”
- விசுவாசத்தில் மறுரூபம். மத் 17:8
“ இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை”
கே. விவேகானந்த்