TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7வேதாகம மனிதர்கள்

காலேப்

கிறிஸ்தவ வாழ்வு என்பது தேவனால் வாக்குப்பண்ணப்பட்டவைகளை சுதந்தரிக்க கூடிய சுதந்தரித்தலின் வாழ்க்கை. “நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,” என வேதம் சொல்லுகிறது ( எபி 6:11).

இஸ்ரவேலர்கள் கானானை சுதந்தரிக்க முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அவர்களின் இறுதி யுத்தம் மலை நாடாகிய எபிரோனை சுதந்தரிப்பதாகும். காலேப் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படியே அதை சுதந்தரித்துக் கொண்டார். அதன் காரணம் காலேப் வேறே ஆவியை உடையவராய் இருந்தார் (எண் 14:24). இங்கு ஆவி என்பது குணாதிசயத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று (1 பேதுரு 3:4). காலேபின் வேறே ஆவியே (குணமே) அவர் எபிரோனை சுதந்தரிக்க காரணமாக அமைந்தது.

காலேபின் வேறே ஆவி என்ன?

1. விசுவாசத்தின் ஆவி. எண் 13:30, 14:24, எபி 11:33.

2. உத்தமத்தின் ஆவி. எண் 14:24, யோபு 14:8,9,14.

3. தாழ்மையின் ஆவி. எண் 14:24.

என் தாசன்

4. பெலத்தின் ஆவி. எண் 14:10-12.

5. தெளிவின் ஆவி. எண் 14:6-8.

காலேப் குழம்பிக் கொண்டிருக்கவில்லை. கர்த்தருக்கு பிரியமாய் இருந்தால் அந்த தேசத்தை நமக்கு தருவார் என்கிற தெளிவை உடையவராய் இருந்தார்.

6. நிலைவரமான ஆவி. யோசு 14:10,11.

45 வருடங்கள் கடந்திருந்தாலும், கர்த்தருடைய வார்த்தையின் மீது அதே விசுவாசம், அதே நம்பிக்கை, அதே பெலன், அதே ஆவி.

7. ஜெப ஆவி. யோசு 14:12-14.

கேட்டு பெற்றுக் கொண்டார்.

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)