தேவ ஞானத்தின் அளவு
தேவனின் அனந்த ஞானத்தின் படைப்புகளை எவரும் அளக்க முடியாது, என்றாலும் அவர் சிலவற்றிற்கு அளவுகளை கொடுத்தார், நோவாவின் பேழை, ஆசரிப்புக் கூடாரம், புதிய எருசலேம் நகரம் போன்று நம் வாழ்விலும் தேவன் தமது அளவை நிர்ணயம் செய்துள்ளார்.
1. நம் ஜீவிய நாட்களுக்கோர் அளவு. சங் 39:4
2. நம் சரீர வளர்ச்சிக்கோர் அளவு. லூக் 12:25
3. நமக்கு அருளப்பட்ட கிருபை வரங்களுக்கோர் அளவு. எபே 4:7
4. நமக்கு அளிக்கப்பட விசுவாசத்திற்கோர் அளவு. ரோ 12:3
5. நாம் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை அடைவதற்க்கோர் அளவு. எபே 4:11
6. ஆண்டவர் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி கொடுக்கும் ஆசீர்வாதத்தின் அளவு. லூக் 6:38
7. தேவ வசனத்தை பேசுவதற்கு தேவ ஆவியின் வல்லமையின் அளவு. யோ 6:38
“தேவன் அளந்த அளவுக்குள் வாழ்வதே ஆனந்தமானது “
அவரையே தந்தருளி இவ்வளவாய் நம்மீது அன்புகூர்ந்தாரே !!!!
✍ K ராம்குமார்