உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்
எபிரேயர் 10:32 முதல் 39 வரையுள்ள வசனங்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.
1. கடந்தகால வாழ்வினை நினை. 10:32-34
2. நிகழ்கால வாழ்வில் கடைபிடி. 10:35,36
3. எதிர்கால வாழ்வை எதிர்நோக்கு. 10:37-39
எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், நிகழ்கால வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவைகளை சொல்லும்போது, “உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்” (எபிரேயர் 10:35) என்று எழுதுகிறார். நிகழ்கால விசுவாச வாழ்வில் “தைரியம்” மிக அவசியமானது, மிகுந்த பலனுக்கேதுவானது. (1 பேதுரு 1:5, அப் 4:13).
இந்த தைரியம் நமது வாழ்வில் எப்படி உண்டாகும்?
1. விசுவாசத்தால். எபே 3:12
2. வசனத்தினாலே. எபி 13:5,6
3. ஜெபத்தினாலே. அப் 4:31
4. கிறிஸ்துவின் இரத்தத்தினாலே. எபி 10:20
5. அவரில் நிலைத்திருக்கிறதினாலே. 1 யோ 2:28
6. அவரை நம்புகிறதினாலே. பிலி 1:20,21
7. தேவனை ஸ்தோத்தரிக்கிறதினாலே. அப் 28:15
“என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்” சங்கீதம் 138:3