கர்த்தர் உனக்கு நிழலாயிருக்கிறார்
“வேலையாள் நிழலை வாஞ்சிக்கிறது” (யோபு 7:2) போல, இன்று மனிதன் நிம்மதிக்காய் நிழல்களைத் தேடி ஓடுகின்றான். நிலையற்ற நிழல்களைத் தேடி நிம்மதி இழந்ததுதான் மிச்சம். ஆமணக்கின் நிழலில் யோனா களிகூர்ந்ததுபோல அவைகள் கொஞ்ச நேரமே (யோனா 4:6,7). மனிதன் தனக்கு நிழல் தரும் என அடைக்கலம் புகும் யாவும் (ஏசா 30:2), சாய்ந்துபோகின்ற நிழல்களே!
நம்முடைய கர்த்தர் நிழல் அல்ல; நிஜமானவர்.
நிஜமாகிய அவரிலிருந்து கிடைக்கும் நிழல் நிரந்தரமானது. இது சாய்ந்துபோகின்ற நிழல் அல்ல; சாவாமையுள்ள நிழல்.
கர்த்தர் நமக்கு எவ்விதம் நிழலாயிருக்கிறார்…
1. மரத்தின் நிழல் – அன்பின் நிழல். உன்னத 2:3
2. கன்மலையின் நிழல் – அடைக்கலத்தின் நிழல். ஏசா 32:1,2
3. மேகத்தின் நிழல் – அறிந்து கொள்ளுதலின் நிழல். மத் 17:5
4. செட்டைகளின் நிழல் – ஆறுதலின் நிழல். சங் 17:9
5. கூடாரத்தின் நிழல் – ஆதரவின் நிழல். ஏசா 4:6
6. கரத்தின் நிழல் – ஆயத்தத்தின் நிழல். 49:2
7. சர்வவல்லவரின் நிழல் – ஆசீர்வாதத்தின் நிழல். சங் 91:1
Vivekk7