தள்ளப்பட்டவைகளே, தேவனால் தகுதியாக்கப்பட்டன !!!
அழகு, அந்தஸ்து, பணம், படிப்பு, நிறம், மொழி, மதம், இனம் என்று மனிதன் தன் சக மனிதனை தள்ளிவிட்டு எள்ளி நகைக்கும் உலகமிது.
ஏன்? தரணிக்கு சொந்தக்காரரையே, தலைகீழாய் தள்ளிவிட முயன்ற உலகமிது. லூக் 4:29
தள்ளப்பட்டவைகளே தகுதியாயின, என்று எழுதினார் ஆண்டவரின் அன்பின் சீஷன்.
(யோவான் சுவிசேஷத்திலிருந்து)
1. தள்ளப்பட்ட நாசரேத்தூரிலிருந்துதான், நன்மை செய்கிறவராக நடந்து வந்தார் நமது ஆண்டவர். யோவான் 1:45-46
2. தள்ளப்பட்ட கற்சாடிகளைக் கொண்டே, கானாவூரின் கலியாண வீட்டை களிப்புறச்செய்தார். யோவான் 2:6-7
3. தள்ளப்பட்ட சிறையிலிருந்த, யோவான்ஸ்நானகனையே, தம் தோழனாக்கினார். யோவான் 3:24-29
4. தள்ளப்பட்ட சமாரியா பெண்ணிடம் தானே, ஜீவத்தண்ணீரை கொடுத்தனுப்பினார். யோவான் 4:41-42
5. தள்ளப்பட்ட நிலையில் முப்பத்தெட்டு வருஷமாய் வியாதியில் கிடந்தவனை, எடுத்து நிறுத்தினார். யோவான் 5:7
6. தள்ளப்பட்ட சிறுமையின் அப்பத்தை, வைத்திருந்த சிறுவனைக் கொண்டே பல்லாயிரம்பேரை போஷித்தார். யோவான் 6:8-9
7. தள்ளப்பட்டு கொல்லப்பட இருந்தவளுக்கு, எழுதினாரே நீதியின் தீர்ப்பை, தரையிலும்! திருமறையிலும்! யோவான் 8:45
“தம்மிடம் வருபவரை இயேசு தள்ளிடவேமாட்டார்” யோவான் 6:37
உங்கள் சகோதரன்
K ராம்குமார் Evg. ஓசூர்
9842164877.