TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7தேவனுடைய ஈவு

என்னைச் சூழ்ந்திருக்கிறது

முழு வேதாகமும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றியே சாட்சி கொடுக்கின்றன.  22 ம் சங்கீதமானது, கிறிஸ்து சிலுவையில் மனிதர்களுடைய பாவங்களுக்காக தொங்கின சமயம், அவரை சூழ்ந்திருந்த பல பிரிவுள்ள மனிதர்களுடைய சுபாவங்களை, கொடிய மிருகங்களின் சுபாவத்திற்கு ஒப்பாக வர்ணித்து எழுதப்பட்டுள்ளது (சங்கீதம் 22:16).

 ஆண்டவரைப்போன்று நாமும் இப்படிப்பட்ட மோசமான உலகத்தால் சூழப்பட்டிருந்தாலும் யோபு பக்தனை சுற்றிலும் தேவன் வேலியடைத்திருந்ததுபோல, நாமும் தேவ காரியங்களால் சூழப்பட்டுள்ளோம்.

1. தேவ காருண்யம் சூழ்ந்திருக்கிறது -சங் 5:12 

( தேவ ஆசீர்வாதத்தின் நடுவில் )

2. இரட்சண்யப் பாடல்கள் சூழ்ந்திருக்கிறது -சங் 32:7 

( மகிழ்ச்சியின் நடுவில் )

3. தேவ பர்வதங்கள் சூழ்ந்திருக்கிறது -சங் 125:2 

( பல அடுக்கு பாதுகாப்பின் நடுவில் )

4. தேவ தூதர்கள் சூழ்ந்திருக்கிறார்கள் -சங் 34:7 

( நம்பிக்கையின் நடுவில் )

5. தேவ கிருபை சூழ்ந்திருக்கிறது -சங் 32:10 

( தாழ்மையின் நடுவில் )

6. தேவப்  பிரசன்னம் சூழ்ந்திருக்கிறது -சங் 139:1-3 

( தேவ சமூகத்தின் நடுவில் )

7. திரளான சாட்சிகள் சூழ்ந்திருக்கிறார்கள் -எபி 12:1 

( வீரமளிக்கும் விசுவாசத்தின்  நடுவிலும்  நாமிருக்கின்றோம் )

தேவ நன்மைகள் நம்மை  சூழ்ந்திருப்பதால் சுகமுடன் வாழ்ந்திருப்போம்.

K ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)