காபிரியேலின் நற்செய்தி
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறக்கும் முன்னே, தேவ தூதனாகிய காபிரியேல், இயேசு கிறிஸ்துவை குறித்து மரியாளுக்கு அறிவித்த நற்செய்தி (லூக்கா 1:26-33), மண்ணுலகத்தில் மனிதனாய் பிறந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.
- கன்னிகையின் குமாரன்
“இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,” (லூக்கா 1:31)
- இயேசு என்ற நாமத்துக்கு உரியவர்
“அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.” (லூக்கா 1:31)
- பெரியவர்
“அவர் பெரியவராயிருப்பார்” (லூக்கா 1:32)
- உன்னதமானவரின் குமாரன்
“உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்” (லூக்கா 1:32)
- தாவீதின் சிங்காசனத்தை வீற்றிருக்கிறவர்
“ கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” (லூக்கா 1:32)
- யாக்கோபின் குடும்பத்தை அரசாளுகிறவர்
“அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்” (லூக்கா 1:33)
- முடிவில்லாத ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரர்
“அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” (லூக்கா 1:33)
கே. விவேகானந்த்