TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7Christmasமரியாள்லூக்காவேதாகம பெண்கள்ஸ்தோத்திரம்

மரியாளின் துதிப்பாடல்

கிறிஸ்துவின் பிறப்பை கூறும் லூக்கா சுவிசேஷத்தின் முதல் இரண்டு அதிகாரங்கள் பாடல்களால் நிரம்பியிருக்கின்றன.

  1. எலிசபெத்தின் பாடல் ( லூக்கா 1: 42-45)
  2. மரியாளின் பாடல் ( லூக்கா 1: 46-55)
  3. சகரியாவின் பாடல் ( லூக்கா 1: 67-79)
  4. தேவதூதர்களின் பாடல் ( லூக்கா 2: 13, 14)
  5. சிமியோனின் பாடல் ( லூக்கா 2: 28-32)

   மரியாள் தனது பாடலில் கிறிஸ்துவின் பிறப்போடுள்ள தேவனின் குணாதிசயங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (லூக்கா 1: 46-55). 

  1. தாழ்மையை நோக்கிப் பார்க்கிறவர் 

“அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்” (லூக்கா 1:48)

  1. வல்லமையுள்ளவர்

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்” (லூக்கா 1:49)

  1. பரிசுத்தர்

“அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது” (லூக்கா 1:49)

  1. இரக்கமுள்ளவர்

“அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது” (லூக்கா 1:50, 54)

  1. நியாயாதிபதி

“தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.”
பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.” (லூக்கா 1:51-53)

  1. உடன்படிக்கையை  நினைவுகூர்ந்து ஆதரிக்கிறவர்

“நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்” (லூக்கா 1:54, 55)

  1. இரட்சகர்

“என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” (லூக்கா 1:47)

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)