கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்
கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். லூக்கா 1: 28
2000 ஆண்டுகளுக்கு முன்பாக தேவதூதன் தோன்றி, வாழ்த்தின வாழ்த்து செய்தி இது. “கர்த்தர் நம்முடனே இருக்கிறார்” என்கிறது நாம் பெற்றிருக்கின்ற மாபெரும் பாக்கியம்.
“கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” என்பது வாழ்த்துதலின் வாக்கியம் மட்டுமல்ல, இவ்வாக்கியம் வேதபுத்தகத்தில் மூன்று நிலைகளில் வெளிப்படுவதை காண முடியும்.
1. “நான் உன்னுடனே இருக்கிறேன்” என்ற வாக்குத்தத்தம்.
இதை தனிப்பட்ட விதத்தில் தேவனே சொல்லுகின்றார். (ஆதி 26:2,3).
2. “கர்த்தர் என்னோடு இருக்கிறார்” என்ற சாட்சி.
இந்த வாக்குத்தத்தை பெற்றவர்கள் அதை அனுபவமாக்கி உணர்ந்து சொல்லும் சாட்சி.
- தாவீது – “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (சங் 23:4).
- ஏரேமியா – “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்” (எரே 20:11).
3. “கர்த்தர் மெய்யாகவே உன்னுடனே இருக்கிறார்” என்ற அறிக்கை.
நமது வாழ்க்கையைக் கண்டு மற்றவர்கள் செய்கின்ற அறிக்கை.
- ஆபிரகாம்மை பார்த்து (ஆதி 21:22).
- ஈசாக்கை பார்த்து (ஆதி 26:28).
“நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கர்த்தர் ஏன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்?
- நம்முடைய சூழ்நிலைகளில் தன்மை வெளிப்படுத்த (ஆதி 26:2,3).
- நாம் கடந்து செல்லும் பாதைகளில் நம்மை வழி நடத்த (ஆதி 28:15).
- தம்முடைய திட்டத்தில் நம்மை பயன்படுத்த (உபா 31:23).
- நம்முடைய சோர்வுகளில் நம்மை பெலப்படுத்த (நியா 6:16).
- நம்முடைய நெருக்கங்களில் நம்மை இரட்சிக்க (எரே 1:8, 19).
- நம்முடைய இயலாமைகளில் நமக்கு துணை நிற்க (அப் 18:10).
- அவருடைய மாபெரும் திட்டத்தை நிறைவேற்ற (மத் 28:20).
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத் 28:20).
“கர்த்தர் நம்முடனே இருக்கிறார்” என்பது மாறாக சத்தியம். ஆனால், அவர் நம்மோடு இருக்கத்தக்கதாக, நாம் வாழ வேண்டியது அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.
சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். (2 நாளா 15:2)
கே. விவேகானந்த்