TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7Sermonsஇருதயம்

மனத்தாழ்மை

   மனத்தாழ்மை என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒர் சிகரம். இன்று அநேகரிடம் சரீரத்தாழ்மை இருக்கிறது ஆனால், மனத்தாழ்மை இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. கர்த்தரை சேவிக்கும்படி அழைக்கப்பட்ட நமக்கு மனத்தாழ்மை மிகவும் அவசியம் (அப் 20:19). நமக்கு நல்லதொரு முன்மாதிரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என்றார் (மத் 11:29). மனத்தாழ்மையை தேடும்படியே வேதமும் கூறுகிறது (செப் 2:3), கர்த்தரும் அதையே நம்மிடம் எதிர்பார்கிறார் (மீகா 6:8).

   எசேக்கியாவின் நாட்களில் பஸ்கா ஆசரிக்கும்படி சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள் (2 நாளா 30:11) என்று வாசிக்கிறோம். அதன் விளைவுகளை தொடர்ந்துள்ள வசனங்களில் நாம் காண முடியும்.

மனத்தாழ்மையின் விளைவுகள்: (2 நாளா 30ம் அதிகாரம்)

1. ஒருமனம். 30:1

2. பரிசுத்தம். 30:15,24

3. தங்களின் ஸ்தானத்திற்கு திரும்புதல் (சரி செய்தல்) 30:16

4. மகா ஆனந்தம். 30:21,23,25

5. கர்த்தரைத் துதித்தல். 30:21

6. கர்த்தருக்கடுத்த காரியத்தில் நல்ல உணர்வு. 30:22

7. விண்ணப்பம் பரலோகத்தில் எட்டியது. 30:27

“உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” மீகா 6:8.

– Vivekk7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)