அற்பமாய் எண்ணவேண்டாம்
நம் இயல்புகளில் ஒன்று அற்பமாய் எண்ணுவது, தேவனின் திருவசனமோ, நாம் அற்பமாக எண்ணக்கூடாதவற்றை வலியுறுத்துகின்றது.
நாம் அற்பமாய் எண்ணக்கூடாதவைகள்
1. ஊனமுற்றோரை, அல்லது உடன் பிறந்தோரை, ஆதி 29:31 அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
2. சிறியவர்களை, மத் 18:10 அவர்கள் பரம பிதாவானவரால் பராமரிக்கப்படுகிறார்கள்.
3. பாவங்களை உணர்ந்து தேவனை தேடுவோரை. லூக் 18:19 தேவன் அவர்களையே நீதிமான்களாக்குகின்றார்.
4. விசுவாசத்தில் பலவீனமானோரை, ரோ 14:3 தேவனே அவர்களை ஏற்றுக்கொண்டார்.
5. சரீரத்தில் பலவீனமான தேவ ஊழியரை, 1கொரிந்தி 16:11 தேவன் அப்படிப்பட்டோரைதான் தெரிந்துகொண்டார்.
6. தீர்க்கதரிசன வசனங்களை, 1தெச 5:20 இது தேவனுடைய ஜீவ வார்த்தை.
7. கர்த்தருடைய சிட்சையை, எபி 12:5
இது தேவன் நம்மீது அன்புகூருவதின் ஆழமான அடையாளம்.
தேவனே எதையும், எவரையும, நான் அற்பமாயெண்ணாதிருக்க எனக்கு கிருபை செய்யும்.
உங்கள் சகோதரன்
K. ராம்குமார்