யோவான் தனது முதலாவது நிருபத்தை எழுதியதின் நோக்கம்
அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம் நிருபத்தை ஏன் எழுதினார் என்பதை, அவர்தானே தனது நிருபத்தின் ஊடாக ஏழு காரணங்களை எழுதியுள்ளார்.
- சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி எழுதுகிறார்.
“உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.” (1 யோ 1:4).
நாம் நிறைவான சந்தோஷம் உள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார் (யோவான் 15:11).
- நாம் தேவனை விசுவாசிப்பதினால் “சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்” களிகூறுவதாக பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 1:8).
- கிறிஸ்துவோடுள்ள உறவு ( ஐக்கியம்) நம்முடைய சந்தோஷத்தை நிறைவாக்கும் ( யோவான் 15: 7-11).
- ஜெபத்திலே அவரோடுள்ள ஐக்கியம் நிறைவான சந்தோஷத்தை கொடுக்கும் (யோவான் 16:24).
ஆகவேதான் யோவான் “ஐக்கியமுள்ளவர்களாகும்படி… உங்களுக்கு எழுதுகிறோம்” (1 யோ 1:3,4) என்கிறார். அந்த ஐக்கியம் சந்தோஷத்தின் நிறைவுக்கு நம்மை நடத்தும். இவ்வித ஐக்கியதற்கு சத்தியத்தின்படி நடத்தல் அவசியம் (1 யோ 1:6, 7).
- பாவம் செய்யாதிருக்கும்படி எழுதுகிறார்.
“நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோ 2:1).
பாவத்தின் மீதான வெற்றி வாழ்க்கைக்கு, யோவான் இந்த நிருபத்தின் மூலமாய் விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறார்.
- பாவத்தை நாம் மூடி மறைக்க வேண்டாம் 1:8
- பாவத்தை நாம் அறிக்கையிட்டால் மன்னிக்க தேவன் ஆயத்தமாயிருகிறார் 1:9
- இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் 1:7
- தற்செயலாய் ஒருவன் பாவத்தில் விழுந்துவிட்டால் “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (1 யோவான் 2:1).
- பழையதும் புதியதுமான கற்பனையை எழுதுகிறார்..
“ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்… மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோ 2:7, 8).
பழையதும் புதியதுமான இந்த கற்பனை, தேவனிடத்திலும், மற்றவர்களிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும் என்பதாகும் ( உபா 6:4-6, யோவா 13:34).
- ஒருவரில் ஒருவர் அன்பு கூறுதல் என்பது ஆதிமுதல் இருந்த கட்டளையாக இருந்தாலும், இது ஏன் புதியது என்று அழைக்கப்படுகிறது என்றால், இந்தக் கட்டளையின் தனிமையில் புதுமை இருக்கிறது.
- இயேசு கிறிஸ்துவின் அன்பின் மூலமாக இந்தக் கட்டளையின் தன்மை என்ன என்பதை எடுத்துக்காட்டுகிறார் (1 யோ 4:7-11).
- “ஒருவரில் ஒருவர் அன்பு கூறுங்கள்” என்ற கற்பனை கால அளவின்படி அல்ல; தரத்தின்படியே இது புதியது
பழைய கட்டளையே திரும்ப சொல்வது போல இருந்தாலும், புதியது கடைபிடிக்க வலியுறுத்துவதும், அதன் முன்மாதிரியிலும் பழையதை விட சிறந்தது
- ஆவிக்குரிய வாழ்வில் வளரும்படி எழுதுகிறார்.
“பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோ 2:14).
- பிதாக்களைப் போல தேவனை அறிந்து…
- வாலிபரை போல பொல்லங்கனை ஜெயித்து…
- பிள்ளைகளைப் போல தேவனுக்குக் கீழ்ப்படிந்து…
நாம் ஆவிக்குரிய குடும்பத்தில் உள்ளவர்கள். பாவம் மன்னிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள். ஆகவே, ஆவிக்குரிய வாழ்வில் வளரும்படி எழுதுகிறார் (1 யோ 2:12).
- வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு எழுதுகிறார்
“உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.” (1 யோ 2:26).
- இது கடைசிக் காலமானபடியால், கள்ள போதனைகளால் வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு, அறிந்த சத்தியத்தில் நிலைத்திருக்கும்படி எழுதுகிறார் (1 யோ 2:18, 21-27).
- சத்தியம் ஒன்றுக்கொன்று ஒருபோதும் முரண்பட்டதாக இருக்காது (1 யோ 2:21).
- இயேசு கிறிஸ்துவை பற்றியதே சத்தியம், கிறிஸ்துவை மறுதலிப்பது கள்ள போதகர்களின் கள்ள போதனை (1 யோ 2:22, 23).
- புதிய ஏற்பாட்டிலே “அந்திகிறிஸ்து” என்ற வார்த்தையை யோவான் மட்டுமே பயன்படுத்துகிறார். இறுதி நாட்களில் அந்திக்கிறிஸ்து வருவான், ஆனால் இங்கு யோவான் அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடைய கள்ள போதகர்களை (பன்மையில்) குறிப்பிடுகிறார் (1 யோ 2:18).
கள்ள போதனைகளால் வஞ்சிக்கப்பட்டு போகாதபடி ஆதி முதல் கேட்ட வசனத்தில் நிலைத்திருந்தால், ஆவியானவர் சகல சத்தியத்திற்கும் உங்களை நடத்துவார்.
- நித்திய ஜீவனை பற்றிய நிச்சயத்தை அறியும்படி எழுதுகிறார்.
“உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும்… இவைகளை எழுதியிருக்கிறேன்.” (1 யோ 5:13).
- தேவன் நமக்கு ஒரு அழியா வாழ்வை கொடுத்திருக்கிறார். அது ஒரு ஈவு, அது ஒருக்காலும் நம்மை விட்டு எடுபடாது என்பதை அறியும்படி எழுதுகிறார்.
- நாம் தேவனுடைய பிள்ளைகள் தான் என்ற உறுதியை (இரட்சிப்பின் நிச்சயத்தை) உடையவர்களாய் இருக்கும்படி இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கிறது.
- தேவ குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறபடியால் எழுதுகிறார்.
“தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1 யோ 5:13).
- யோவான் சுவிசேஷம் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கும்படி எழுதப்பட்டது ( யோவா 20:31)
- 1 யோவான் நிருபம் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறதினால் உண்டாகும் நிச்சயத்தை குறித்து எழுதப்பட்டுள்ளது.
- நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற நிச்சயம் (1 யோ 5:13).
- நம்முடைய ஜெபங்களுக்கு பதில் உண்டு என்ற நிச்சயம் (1 யோ 5:14, 15).
- நாம் தேவனால் பிறந்தவர்களானதால் பாவம் செய்வதில்லை என்ற நிச்சயம் (1 யோ 5:18).
- நாம் தேவனை அறிந்தவர்கள் என்ற நிச்சயம் (1 யோ 5:20).
K. Ramkumar Evg