கொஞ்ச நேரத்தில்

தென்றல் கடும் புயலாக மாறியது  “கொஞ்ச நேரத்தில்”  அப் 27:13-14

கொரோனாவின் முதல் அலை அடங்கி தென்றல் மெதுவாய்  வீசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில், நிவர் என்ற புயல் நம்மை நெருங்கி வந்தது வருத்தமே, விஞ்ஞானிகளாலும் சரிவர விளங்கிக்கொள்ள இயலாத காற்றையும், புயலையும் பற்றி தேவன் நமக்குக் கொடுத்த வேதத்தின் வெளிச்சத்தில், அவைகள் என்னதான் செய்கின்றன என்பதை நம்மால் காணமுடிகிறது.

தென்றல் காற்றும் புயல் காற்றும் …..

1. தேவனுடைய சொற்படி செய்துவிட்டு, துதியும் செய்கிறது. சங் 148:8

2. தேவனுடையவர்களுக்கு புது உலகை ஆயத்தம் செய்தது. ஆதி  8:1

3. தேவ ஜனங்கள் திசைமாறி விலகும்போது, மீண்டும் தேவனுக்கு நேராகத் திருப்புகிறது. சங் 107:25 – 28

4. தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறது. சங் 135:6 – 7

5. தேவன்மீதுள்ள நம் விசுவாசத்தை பரீட்சிக்கின்றது. யோபு 1:19

6. தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடத்திற்கு நம்மை கொண்டு சேர்க்கிறது. அப் 27:40

7. தேவனற்ற துன்மார்க்கரை அலைக்கழிக்கிறது. சங் 1:4

காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தை கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்கு போகிறதென்றும் உனக்குத் தெரியாது, யோவான் 3:8

“தென்றலோ ! புயலோ ! காற்றை தமது கைப்பிடிகளில் அடக்கி வைத்துள்ள கர்த்தர்  (நீதிமொழி 30:4)  இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கைப் படகிலிருக்கிறார்.”

K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: