தேவனுடைய வசனம்
தேவனுடைய வசனம் நம் வாழ்வில் என்ன செய்கிறது?
- ஜீவன் தருகிறது. 1 பேதுரு 1:23
நமது வாழ்வை அர்த்தப்படுத்தி, ஆவியிலும், ஆத்துமாவிலும் பெலனடைய செய்கிறது.
- தாங்குகிறது. எபி 1:3
பணமோ, பொன்னோ, பொருளோ மாறிப்போகும், தேவனுடைய வசனமோ நம்மை ஆறுதல்படுத்தி தாங்கும்.
- பரிசுத்தமாக்குகிறது. யோவான் 17:17
நம்முடைய தவறுகளை உணர்த்தி அதற்குரிய பரிகாரத்தை காண்பிக்கும்.
- வழிகாட்டும். சங் 119:105
வாழ்வில் பாதை மாறிப் போகும்போதும், என்ன செய்யவேண்டும் என்று அறியாத போதும் ஆலோசனை தந்து வழி நடத்தும்.
- காரியங்களை வாய்க்கப்பண்ணும். ஏசா 55:11
வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தும்.
- குணப்படுத்தும். சங் 107:20
பாவம் வியாதி குணமாக்கும் அருமருந்து.
- பிரகாசிக்கச் செய்யும். பிலி 2:14
மேன்மையான உன்னத வாழ்வை தரும்.
“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” சங்கீதம் 1:2
கே. விவேகானந்த்