இயேசு கிறிஸ்து பிறந்ததினால்…
- தேவனுக்கு மகிமை உண்டானது.
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை… உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” லூக்கா 2:14
.
- மரியாளுக்கு கிருபை கிடைத்தது.
“மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.” லூக்கா 1:30
.
- யோசேப்பு ஆச்சரியப்பட்டார்.
“அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.” லூக்கா 2:33
.
- மேய்ப்பர்கள் நற்செய்தியை கேட்டார்கள்.
“பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” லூக்கா 2:10
.
- சிமியோன் சமாதானம் பெற்றார்.
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்.” லூக்கா 2:29
.
- சாஸ்திரிகள் ஆனந்த சந்தோஷமடைந்தனர்.
“அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.” மத்தேயு 2:10
.
- ஏரோதுக்கு கலக்கம் உண்டானது.
“ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.” மத்தேயு 2:3
உங்களுக்கு ?
கே. விவேகானந்த்
Good for teaching others
ThNks
Thank you Brother